பென்னாகரம், ஜூலை 4- தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நக ரம் மற்றும் பகுதிக்குழுவிற்குட்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு பென்னாகரம் நகரச் செயலாளர் எஸ்.வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். பகுதி குழு செயலாளர் கே.அன்பு முன்னிலை வகித் தார். இதைத்தொடர்ந்து, புதிய அலுவல கத்தை மாவட்டச் செயலாளர் ஏ.குமார் திறந்து வைத்தார். இவ்விழாவில், சிபிஎம் மாநிலக் குழு உறுப் பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, ஆர்.சிசு பாலன், வி.விஸ்வநாதன் மற்றும் மாவட்டக் குழு, பகுதிக்குழு செயலாளர் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.